Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

நண்பர்களின் முக்கியத்துவம்

 சிலருக்கு நட்புகள் பாரம், சிலருக்கு தான் வரம் இருந்தாலும் நட்பு என்ற ஒரு புள்ளி இல்லாமல் வாழ்வை தகர்த்த முடியாது என்பது தான் எதார்த்தம். 

நட்பு எப்போது எல்லாம் தேவைப்படும் என்றால் நட்பு எப்போதும் தேவைப்படும். திருமணம் என்ற ஒன்று ஆகும் வரை நட்பு ஊரில் அல்லது ஊரை சுற்றி, பள்ளியில் அல்லது கல்லூரியில் வேலை செய்யுமிடங்களில் என்று ஆணுக்கும் ஆணும் அல்லது பெண்ணும் இருக்கலாம்.

பெண்களுக்கு தான், இருப்பினும் நாம் நினைப்பது போல நட்பு என்பது ஒரு உறவு முறையல்ல அது ஒரு உணர்வு தாய் தந்தையரிடம் நண்பர்களாக இருக்கலாம். மனைவி அல்லது அண்ணன் தம்பிகள் என எல்லா உறவுகளிலும் தான் நட்புகள் உள்ளது.


நட்பின் பரிணாமம் ஒளிவு மறைவு அற்றது. அது சுயநலமற்ற ஒரு உணர்வு விட்டுக் கொடுக்கும் மனது என்று அங்கு உணர்வுகள் அன்பால் மாத்திரம் கொட்டிக் கிடக்கும்.

புதிதாக பேருந்து பயணத்தில் ஒரு நபரை சந்திக்க முதல் நட்பு புன்னகையில் மலர்கிறது அடுத்த அடுத்த சந்திப்பு சிறிது சிறிதாய் நட்பை கசிகிறது.

அந்த நட்பு டீ கடையில் தொடர, பிராண்டி கடையில் தொடர என உயிருக்கு உயிரான நண்பர்களாக்கி இருவீட்டார் நட்பாகி பெண்கொடுத்து பெண்ணெடுக்கும் வரை அந்த நட்பு பலமாகிறது. 

இப்படி இந்த நட்பு என்ற உணர்வு நம்பிக்கையின் வெளிப்பாடு. ஆனால் அதனை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

அவர்கள் சில சமயங்களில் புரிந்து கொள்கிறார்கள் சில வேலைகளில் கடந்து விடுகிறார்கள் ஆனால் அது நட்பில் இல்லை என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ளவேண்டும்.

நட்பு என்ற உணர்வு அவனை புனிதனாக்கி விடும். நட்பு ஒருவர் மீது உள்ளது என்றால் அவரை பற்றி நன்றாக புரிந்து கொண்டுள்ளனர் என்று அர்த்தம். ஒருவரைப் பற்றிய புரிதல் இல்லாமல் அவர் எனது உயிர் தோழனன் என்பது அறிவருப்பு.

அதனை எப்படி நட்பு என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. பலர் இப்படித் தான் நட்பு என்றால் என்னவென்று தெரியாமல் ஏதோ நான்கு நாள் பேசி பழகினாலே நட்பாகி விடும் என்று நினைக்கிறார்கள்.

நட்பு தான் இல்லை யென்று மறுக்க முடியாது என்றாலும் நட்பு என்றால் என்னவென்று விளங்கிக் கொள்ளவாது வேண்டுமே.!

அனைவருக்கும் சிறுவயது நண்பர்கள் பிடிக்காமல் இருப்பது இல்லை. நான்பார்த்த பலருக்கு வாழ்வு முழுவதும் அவர்கள் அதுபோலவே தொடர்வதை பார்த்துள்ளேன்.

அப்படியான நட்புகளை கண்டு பொறாமை கொண்டுள்ளேன். என்று பலர் கூற கேட்டிருப்போம் அப்படி ஒரு நட்பிற்குள் மறைப்பதற்கு எதுவும் இல்லை. 

அது ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. காதலை போல நட்பும் அன்பின் உணர்வு இரண்டும் தரும் இன்பங்கள் வெவ்வேறு. 

காதல் உணர்வு மேலோங்கி கீழிறங்கி நிலையில்லாமல் இரண்டு எல்லைகளையும் மாறி மாறி தொட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் நட்பின் உணர்வு ஒரே நிலையில் பயணிக்கும். அது பாடுபடுத்திப் பார்க்காது.

அதீத உரிமைக் கொண்டிருக்கும். வேற்றுக் கருத்துக்களுக்கு அங்கு இடமிருக்காது. உலகில் வாழும் காலங்கில் இயற்கை கொடுத்த இந்த மகத்தான உணர்வுகளை அனைவரும் அனுபவித்து விடுங்கள்.

காதல், காமம், நட்பு, அரவணைப்பு, அன்பு, நேசம் என்று பலவாறான இரு எதிர் உணர்வுகளும் அனுபவித்துப் பார்க்கவே.





Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...